யார் வேண்டுமானாலும் சி.எம். ஆகலாம் என கூறும் முதல்வர் பதவியை ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி விட்டுக்கொடுப்பாரா? : துரைமுருகன் கேள்வி

சேலம்: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் சிஎம் ஆகலாம் என கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்க்கு தனது பதவியை விட்டுக்கொடுப்பாரா?  என  எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழுவினர், அதன் தலைவர் துரைமுருகன் தலைமையில் நேற்று சேலத்திற்கு வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுகூட்டம் நடந்தது.

பின்னர், சேலம் சங்கர் நகரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதிக்கு சென்று, இக்குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு வரலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அப்படியென்றால், ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, தனது பதவியை விட்டுத்தர தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: