திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சிக்கிய 45 லட்சம் ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கு லஞ்சமாக கொடுக்க கொண்டு வந்த பணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம் தம்பானூர் மத்திய ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் ஒருவர் நின்று கொண்டு இருப்பதாக ரயில்வே போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ரயில்வே இன்ஸ்பெக்டர் ஆசாத் தலைமையிலான போலீசார் ரயில் நிலையம் மற்றும் அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது ஒருவரிடம் இருந்த பையில் கட்டுக்கட்டாக 2000, 500 நோட்டுகள் இருந்தன. அவரிடம் மொத்தம் 45 லட்சம் இருந்தது. விசாரணையில் பெங்களூரு ஏலகங்கா பகுதியைச் சேர்ந்த கங்காராஜ் (42) என்று தெரியவந்தது. மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க கொண்டு வந்த பணம் என்பதும் தெரியவந்தது.