சென்னை: வேளாண் உற்பத்தி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 11 கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டிலும் 13 கரும்பு சாகுபடி வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.6 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கான பயனாளிகள் கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் ஒத்துழைப்புடன் தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு ஆண்டில் கரும்பு இயந்திர வாடகை மையங்கள் அமைப்பதற்கு, இதுவரை, 10 முன்னோடி விவசாயிகள் / தொழில் முனைவோர் முன்வந்துள்ளனர்.