காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். விவசாய பயன்பாட்டிற்காக சோழர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. கீழணையில் திறக்கப்படும் காவிரிநீர் வடவாறு வழியாக விநாடிக்கு 450 முதல் 2600 கனஅடிகள் வரை அதிகரிக்கப்பட்டு வீராணம் ஏரியை வந்தடைந்தது. ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் சென்னை மக்களுக்கு வரும் கோடையில் தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்துள்ளது.