அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்ற பரிசீலனை செய்வதை ரத்து செய்ய வேண்டும்

* பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வலியுறுத்தல்

சென்னை: அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை, அதன் அமைவிடமான சென்னையிலிருந்து மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் நியாயமற்றது என்பதுடன் சென்னை மற்றும் தமிழக நலன்களுக்கு எதிரானது. இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: