×

கடையில் கொள்ளை

துரைப்பாக்கம்: கந்தன்சாவடியை சேர்ந்தவர் இளங்கோ (40). பெருங்குடி சீவரம் ராஜிவ்காந்தி சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க சென்றபோது, கடையில் வைத்திருந்த 20 பழைய, புதிய செல்போன் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.1,500 கொள்ளை போனது தெரிய வந்தது. புகாரின்பேரில் துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : robbery ,store , Shop, robbery
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...