ஒரே நாளில் 4 பேர் தற்கொலை

சென்னை: மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கோகுல லட்சுமி (24). குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், தி.நகரில் குடும்ப பிரச்னை காரணமாக தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் (30) என்பவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மேலும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தேனாம்பேட்டையில் ஆட்டோ டிரைவர் விஜயகுமார் (40) மற்றும் அசோக் நகரில் குடும்ப பிரச்னையால் சுரேஷ் (30) என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: