புதுடெல்லி: சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் வகையிலும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாகவும் பேட்டரி வாகன பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த வாகனங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுவது பேட்டரிதான். உள்நாட்டிலேயே இவற்றை தயாரிக்க வேண்டும் என்றால் லித்தியம் தேவை. இதற்காக, முதன்முதலாக இந்தியாவில் லித்தியம் சுத்திகரிப்பு தொழிற்சாலையை தனியார் நிறுவனம் ஒன்று நிறுவுகிறது. இந்த நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேட்டரி வாகனங்களுக்கு மிக முக்கிய தேவையான பேட்டரியை தயாரிக்க லித்தியம் அவசியம். ஆனால் இந்த ரசாயனத்தை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதுபோல் கேத்தோட், பேட்டரி செல் உட்பட பேட்டரி தயாரிப்புக்கான முக்கிய பொருட்களுக்கும் சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் லித்தியம் இல்லை.