வண்டியை எடுக்க சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது பைக் மோதல்; 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்த பைக் எடுக்க கூறியதால் போக்குவரத்து காவலர் மீது பைக்கால் மோதிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை சிங்காரத் தோட்டம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமரன் (46). வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் நிலைய டிரைவர். நேற்று முன்தினம் மாலை பாரிமுனை ராஜாஜி சாலையில் பணியில் இருந்த போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் பைக்கை நிறுத்தி வைத்திருந்தனர். இதனை எடுக்க கூறியபோது பைக்கின் உரிமையாளர்கள் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த பெரோஸ்கான் (42) மற்றொரு பெரோஸ்கான் (43) ஆகிய 2 பேரும் போக்குவரத்து காவலரிடம் சண்டை போட்டு பைக்கால் மோதி காயம் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து ஒருவர் தப்பி சென்றார். செந்தில்குமரன் வடக்கு கடற்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: