பல பெண்களுடன் தொடர்பு: குமரி அதிமுக நிர்வாகி மீது இளம் பெண் பரபரப்பு புகார்

நாகர்கோவில்: திருவனந்தபுரம் பாலராமபுரம் பகுதியை ேசர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகள் நளினகுமாரி என்ற ஆனிலதா (33).  தற்போது நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே இன்று எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், எனக்கும், சுசீந்திரம் அக்கறை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. நான் உடல்நிலை சரியில்லாத எனது அத்தையை பார்க்க நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வந்தபோது பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்துக்கு முன்பு மீன் குத்தகை, டாஸ்மாக் பார் ஏலம் எடுக்க என்று என்னிடம் இருந்து பணத்தையும், நகைகளையும் வாங்கி கொண்டார். திருமணத்தின்போது ரூ. 3 லட்சம், வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்தோம். திருமணமான முதல் நாளில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் நான் எதுவும் கேட்கவில்லை. மறுநாள் கேட்டபோது என்னை தாக்கினார். இருப்பினும் சமாளித்து வாழ்ந்து வந்தேன். இந்த நிலையில் பூதப்பாண்டியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்து கருக்கலைப்பு வரை சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கணவரின் குடும்பத்தினரிடம் கேட்டபோது ஏற்கனவே உனக்கு தெரியும் என நாங்கள் நினைத்தோம் என்றனர். அதைத்தொடர்ந்து நான் விசாரித்தபோது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனால் எங்களுக்குள் பிரச்னை அதிகரித்தது. அவர் என்னை உடல் ரீதியாக மிகவும் காயப்படுத்தினார். 2017ல் என்னை தாக்கியதில் கைமுறிவு ஏற்பட்டதில் இருந்து அத்தை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன்.

தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. என்னிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து வாங்காமல் இந்த திருமணம் நடந்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: