தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஆம்னி வேனையும் கைப்பற்றினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு அரிய வகை உயிரினமான கடல் அட்டைகள் அடிக்கடி கடத்தப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த ஒரு மாதத்தில் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 220 கிலோ கடல் அட்டைகளை சிப்காட் போலீசாரும், 500 கிலோ கடல் அட்டைகளை தாளமுத்துநகர் போலீசார் கைப்பற்றினர். கடல் அட்டைகளை கொண்டு செல்ல இலங்கையில் எந்தத் தடையும் இல்லாததால், அங்கிருந்து அரபு நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், ஆண்மை விருத்தி மாத்திரை தயாரிப்பதற்கு கடத்தப்படுகிறது.

இவ்வாறு கடத்தப்படும் கடல் அட்டைகளை காய வைத்து, பொடியாக்கி ஆண்மை சக்தி மாத்திரை தயாரிப்பாளர்களாம். ஒரு கிலோ கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே கடல் அட்டைகளை கடத்தி இலங்கைக்கு கப்பல் வழியாக கொண்டு செல்ல இருப்பதாக வடபாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திரேஸ்புரம் அருகே மேட்டுப்பட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். ்அப்போது கடற்கரையை நோக்கி ஒரு ஆம்னி வேன் வந்தது. இதை கண்காணித்த போலீசார் வேனை சுற்றி வளைத்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வேனில் இருந்த 4 பேரும், கடல் அட்டைகளை வைத்திருந்த 4 டிரம்களையும், வேனையும் அப்படியே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். வடபாகம் போலீசார் ஆம்னி வேனை சோதனையிட்டதில் அதில் 5 டிரம்களில் சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். கடற்கரைக்கு கடல் அட்டைகளை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் கைப்பற்றினர். வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகளை கடத்த முயன்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: