சென்னை: ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏவாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக தரப்பில் தொடரப்பட்டிருந்த வழக்கில், அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2016ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சரோஜாவும், திமுக சார்பில் அப்போதைய முன்னாள் சபாநாயகர் வி.பி துரைசாமியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சரோஜா, வி.பி துரைசாமியை விட 9 ஆயிரத்து 631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் அவர் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வி.பி துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பாக பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் செய்ததன் மூலமாக தான் சரோஜா வெற்றி பெற்றிருக்கிறார்.