தமிழ்நாட்டிலும் தர்பார் நடத்துகிறார்: பெரியாரை பற்றி, ரஜினி கூறி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை...அமைச்சர் உதயகுமார் பேட்டி

மதுரை: எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். ஊராட்சிமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. முகாமை துவக்கிவைத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது, பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நாட்டுக்காக உழைத்தவர்கள் குறித்து கருத்து கூறும்போது அவர்கள் பற்றி முழுமையாக அறிந்து கூற வேண்டும் என்றும், கொள்கையில் மாற்றுக் கருத்து இருக்குமானால் மக்கள் மனம் புண்படாத வகையில் அதை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமூக நீதியின் காவலனாக திகழ்ந்த பெரியாரை பற்றி, ரஜினி கூறி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் தமிழக மக்கள் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். தர்பார் படம் என்று பார்தோம் அவர் தமிழ்நாட்டிலும் தர்பார் நடத்தி கொண்டிருக்கிறார். அந்த தர்பார் எங்கேபோய், மக்கள் தீர்ப்பு தரப்போகிறார்கள் என்பதை காண நானும் ஆவளுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Related Stories: