கல்பாக்கம் அருகே பள்ளி மாணவனுக்கு முடி வெட்டிவிட்ட ஆசிரியர்: சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

கல்பாக்கம்: அதிக முடி வைத்து பள்ளிக்கு வந்த மாணவனுக்கு, பள்ளி ஆசிரியரே முடி வெட்டிவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ஆம் வகுப்பு படித்து வரும்  மாணவன், தலையில் அதிக முடியுடன் பள்ளிக்கு வந்துள்ளான்.

பல முறை ஆசிரியர் அறிவுறுத்தியும் அந்த மாணவர் முடியை வெட்டி வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அறிவியல் ஆசிரியர் துரை  என்பவர், அந்த மாணவனின் அனுமதியோடு, பள்ளி வளாகத்திலேயே, கத்தரிக்கோல் மூலம் முடியை வெட்டியுள்ளார். தற்போது, மாணவனுக்கு  ஆசிரியர் முடி வெட்டிவிடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு  தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: