சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவிரிப் படுகையை இரண்டு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு 1ல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. பிரிவு 2ல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.
ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும் விவசாயிகள், பொதுமக்கள் சாகும்வரை போராட்டம், வயல்களில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் ஜன.28-ல் கண்டன ஆர்ப்பாட்டம்... ஸ்டாலின் அறிவிப்பு
- ஆர்ப்பாட்டம்
- மாவட்டங்களில்
- எம்.கே. ஸ்டாலின்
- டெல்டா
- திமுக
- அறிவிப்பு
- டெல்டா பிராந்தியத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக டி.எம்.கே எதிர்ப்பு தெரிவிக்கும்