தென்காசியில் விளைநிலத்தில் ஆட்சியர் அலுவலகம்...: தலைமை செயலாளர், வருவாய் துறைக்கு நோட்டீஸ்

தென்காசி: தென்காசியில் விளைநிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்தது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் அளிக்க தலைமை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதை அடுத்து அங்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாய கூட்டமைப்பினர் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து இருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம், இது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க தலைமை செயலாளர், வருவாய் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: