தென்காசி: தென்காசியில் விளைநிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்தது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் அளிக்க தலைமை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதை அடுத்து அங்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.