சென்னை: மாமல்லபுரத்தை அழகுப்படுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வழக்கு தொடந்தது.