உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து 27ம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு பொள்ளாச்சி சர்க்கார்பதியில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்படுகிறது. பி.ஏ.பி. பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.