புதுடெல்லி: ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற பல ஆண்டுகள் பிடிக்கும் என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன்சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த விளக்கத்தை ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது. கடந்த 2019 - 2020ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ரயில்வேத்துறை திட்டங்களுக்காக மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன செலவாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவே இதுவரை அறிவிக்கப்பட்டதில் மிகப்பெரிய தொகையாகும். ஆனால் இந்த தொகையை திரட்டி பணிகளை முடிக்க பொதுமக்கள் மற்றும் தனியாரின் முதலீடுகள் கண்டிப்பாக தேவை என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் தனியார் முதலீடு இல்லாமல் பணிகளை முடிக்க இயலாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இது தனியார்மயமாக்குவதற்கான முயற்சி என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற பல ஆண்டுகளாகும்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அமைச்சகம் விளக்கம்
- செயல்படுத்த
- ரயில்வே அமைச்சகம்
- பாராளுமன்ற நிலைக்குழு
- ரயில்வே துறையில் செயல்படுத்தும் திட்டங்கள்: ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு