திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் கோயில் கட்டுவதற்கான பணி தீவிரம்

உளுந்தூர்பேட்டை:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி திருமலா  தேவஸ்தானத்தின் மூலம் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில் கட்டுவதற்கான இடம் தேர்வு  செய்யும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தானத்தின்  அதிகாரிகள், தேவஸ்தான அறங்காவலர் குமரகுரு எம்எல்ஏ உள்ளிட்டவர்கள் சேலம்  ரோடு ரவுண்டானா அருகில் அம்பிகாபதி என்பவருக்கு சொந்தமான இடம் மூன்றரை  ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் நேற்று வருவாய் துறை  அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த இடத்தில் மொத்தம்  எத்தனை ஏக்கர் இடம் உள்ளது. கோயிலுக்கு தேவையான இடம் எவ்வளவு என்பது  குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

Related Stories: