உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி திருமலா தேவஸ்தானத்தின் மூலம் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரிகள், தேவஸ்தான அறங்காவலர் குமரகுரு எம்எல்ஏ உள்ளிட்டவர்கள் சேலம் ரோடு ரவுண்டானா அருகில் அம்பிகாபதி என்பவருக்கு சொந்தமான இடம் மூன்றரை ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.