டெல்லி: 144 மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை சிஏஏ பற்றிய வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.