பெங்களூரு: மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார். மங்களூரு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த வெடிகுண்டுகளில் டைமர் ஏதும் இல்லாததால் அன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், விமான நிலையத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, மாநில அரசுகளை மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது. இதுபோன்ற நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை அதிகமாக்கியது.
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் சரண்: போலீசார் விசாரணை
- சரண்
- பொலிஸ் விசாரணை
- குண்டு வெடிப்பு
- மங்களூரு சர்வதேச விமான நிலையம்
- விமான நிலைய
- ஆதித்யா ராவ்
- Mangaluru