பெங்களூரு: மசூதிகள் குறித்து கர்நாடக பாஜ எம்எல்ஏ ரேணுகாச்சார்யா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜ எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, ‘‘இஸ்லாமியர்கள் மசூதிகளை ஆயுதங்கள் பதுக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு இனிமேல் ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்க முடியாது. மசூதியில் தொழுகை நடக்கிறதா? மசூதியை வைத்துக்கொண்டு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டு இருக்கிறீர்களா?’’ என்று பேசினார்.