×

‘வேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி விவாதம் நடத்த வேண்டும்’

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கிராமங்களில் வேலையில்லா திண்டாட்டம் 44% ஆக உள்ளது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மோசமான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். `மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்பது போல், குறைந்து வரும் வேலைவாய்ப்பு விகிதம், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் பற்றியும் மோடி விவாத நிகழ்ச்சி நடத்த வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Modi , Modi, debate unemployment
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...