புதுடெல்லி: ராணுவத்துக்கு ரூ.5,100 கோடி அளவுக்கு உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை கொள்முதல் குழு கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ராவத் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் முதல் கொள்முதல் குழு கூட்டம் இதுவாகும். இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: