×

ஹோண்டா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனம் அறிமுகம்

சென்னை: 2020ம் ஆண்டை கொண்டாடும் வகையில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் புதிய தலைமுறையினருக்கான இரு சக்கர வாகனத்தை (பிஎஸ்-6 ஆக்டிவா 6ஜி) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலையாக ₹63,912 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்து அந்நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியும் மற்றும் மேலாண்மை இயக்குனருமான மினோரு கட்ேடா பேசுகையில், “பிஎஸ்-6 ஒழுங்குமுறை அமலாவதற்கு முன்கூட்டியே ஹோண்டா நிறுவனம் தான் இந்தியாவில் பிஎஸ்-6 விற்பனையை தொடங்கிய முதல் உற்பத்தி நிறுவனம்.  எஸ்பி 125-ஐ தொடர்ந்து ஆக்டிவா 125-ஐ ேஹாண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த இரண்டு பிஎஸ்-6 மாடல்களும் 75,000 யூனிட்டுகளை நாங்கள் ஏற்கனவே இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பியுள்ளோம். தற்போது, நாங்கள் அனைத்து புதிய பிஎஸ்-61 ஆக்டிவா 6ஜி-ஐ அறிமுகப்படுத்தும் நிலையில், இது மற்றொரு அமைதியான புரட்சியை ஏற்படுத்தும். இந்தியாவில் எங்கள் வணிக விரிவாக்கத்தை மேலும் பலப்படுத்தும்” என்றார்.



Tags : Honda , Honda, the new two-wheelers
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...