×

செல்போன் வழக்கில் முருகன் ஆஜர்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர்  18ம் தேதி முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் ஜேஎம்1 கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர்.  வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ஜெகநாதன், வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Murugan Azhar ,Murugan Azar , Cell phone case, Murugan
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...