புதுடெல்லி: அரியானாவை சேர்ந்தவர் பிரேந்திர சிங். முன்னாள் மத்திய அமைச்சரான இவர், பாஜ சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது எம்பி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் வரும் 2022 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். பிரேந்திர சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங் ஹிசார் மக்களவை தொகுதிஎம்பி.யாகியுள்ள நிலையில், தந்தை மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளது பாஜவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.