சென்னை: குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. அன்றைய தினம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றுகிறார். பிறகு அவர் முப்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மேலும், தமிழக அரசு துறையின் வாகன அணி வகுப்பையும் பார்வையிடுகிறார். இதையொட்டி நிகழ்ச்சியில் தங்களது வாகனங்களை காட்சிப்படுத்தும் வகையில், அதற்கான பணியில் ஒவ்வொரு அரசுத்துறையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் வாகனம் அணிவகுப்பில் பங்கேற்கிறது.