மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

சேலம்: நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (58). இவர் கடந்த 15ம் தேதி விபத்தில் படுகாயமடைந்து 19ம் தேதி மூளைச்சாவு நிலையை அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் கூறுகையில், சிவலிங்கத்தின் உடலில் இருந்து இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை எடுக்கப்பட்டது. இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. ஒரு சிறுநீரகம் இங்குள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் ஒருவருக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கல்லீரல் பயன்படுத்தப்படவில்லை என்றார்.

Related Stories: