மதுரை: தாம்பரம்-நாகர்கோவில் ரயிலில் படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் 2 பேர் காயமடைந்தனர். சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்றிரவு 7.20 மணிக்கு நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் கிளம்பி வந்தது. எஸ்10 பெட்டியில் படுக்கை எண் 35ல் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த தர்மராஜ் (70) கீழ் பர்த்தில் தூங்கி கொண்டிருந்தார். நடு பர்த்தில் ஒருவர் படுத்திருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் நடுவில் உள்ள பர்த் திடீரென சங்கிலி கழன்று, லோயர் பர்த்தில் தூங்கிய முதியவர் தர்மராஜ் என்பவர் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.