திருவலம்: காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிமக்கள் பெல், பெல் ஆன்சிலரி, சிப்காட், ராணிப்பேட்டை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், பெல், தக்காம்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவலத்திற்கு தங்களது அன்றாட தேவைகளுக்காக பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்று தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.