சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த 43வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதில் 13 நாட்களில் 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். அதுமட்டுமின்றி 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கீழடி புத்தகங்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 13 நாட்களும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகங்களை பார்ப்பதற்கும், அதேபோன்று விற்பனையும் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது 20 கோடி ரூபாய் அளவிற்கு வந்துள்ளது. தொடர்ந்து, 43வது புத்தக கண்காட்சியில் விற்பனையும், வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தாலும் அரசு அதற்கான உரிய நடவடிக்கையாக ஒரு நிரந்தர புத்தக கண்காட்சி நடத்தக்கூடிய வகையில் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என அங்குள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 43வது புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கானோர் வருகை புரிவதோடு மட்டுமின்றி புத்தகங்களும் அதிகளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.