சீனா: இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதிமூன்றரை ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் சிக்கிய இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு சீன நீதிமன்றம் பதிமூன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. சீனாவில் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மற்றும் கடலோர காவல் படை தலைவராக இருந்த இவர் பிரான்சை தலைமையகமாக கொண்ட சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு தமது பதவியை ராஜினாமா செய்தார்.