ராமநாதபுரம்: மலேசியாவில் பொறியாளர் வேலைக்குச் சென்ற மகனை சிறையிலிருந்து மீட்டுத்தருமாறு அவரது தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது மகன் அஜித்குமார்(24). இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்திருந்தார். இவருக்கு மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக பட்டணம் காத்தான் பகுதியைச் சேர்ந்த இளங்கோ-கண்ணகி தம்பதி கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் 85 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் வீரலட்சுமி. இதையடுத்து அஜித்குமாரை கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.