×

ஹெல்மெட் அணிந்திருந்தால் லட்டு அணியாதவர் தலையில் குட்டு: திருமங்கலத்தில் ருசிகரம்

திருமங்கலம்: தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நகர் போக்குவரத்து போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் இணைந்து வித்தியாசமாக கொண்டாடினர். திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர்களில் வந்தவர்களை போக்குவரத்து போலீசார் நேற்று காலை திடீரென நிறுத்தினர். அங்கு சிறிதுநேரத்தில் வந்த டிஎஸ்பி அருண் மற்றும் அதிகாரிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினர். பின்னர் டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு லட்டு வழங்கினர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை அவர்கள் கைகளை கொண்டே தலையில் குட்டிக்கொள்ளும்படி வித்தியாசமான தண்டனை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராத ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், தங்கள் தலையில் குட்டிகொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கும் லட்டு வழங்கிய போலீசார் சாலை பாதுகாப்பு குறித்து  துண்டுபிரசுரங்களை வழங்கினர்.

Tags : Thirumangalam , Helmet, Lattu, Kuttu, Thirumangalam
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி