லக்னோ: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு உளவு பார்த்ததாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராணுவ ரகசியங்கள் பாகிஸ்தான் உளவுதுறைக்கு பரிமாற்றப்படுவதாக தீவிரவாத தடுப்புப்படை மற்றும் ராணுவ உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் வாரணாசியை சேர்ந்த ரசீத் அகமத் என்பவர் ேநற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்மார்ட்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் சிஆர்பிஎப் முகாம் கள், முக்கிய ராணுவ நிலைகள் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏஜென்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், இரண்டு முறை ரசீத், பாகிஸ்தான் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.