புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத்தவுள்ளதாகவும் கூறினார். மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற இயலாது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: