காட்டுமன்னார்கோவில்: போலியோ சொட்டு மருந்து போட்டதும் ஒரு வயது குழந்தை இறந்தது காட்டுமன்னார் கோவிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி புத்தூர் அருகே பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது குழந்தை ஹரீஷூக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்காக டி.மணலூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்றனர். போலியோ சொட்டு மருந்து போட்டதும் வீட்டுக்கு வந்தனர்.