சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான விண்ணப்ப பதிவும் ஆன்லைனில் தொடங்கியது. இந்த வருடத்தில் நடைபெறும் முதல் குரூப் தேர்வு இதுவே ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 1ம் தேதி, குரூப் 1 தேர்வு பற்றிய குறு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிலை பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டது. இதையடுத்து தேர்வர்கள் இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குரூப் 1 தேர்விற்கான தகுதி இட ஒதுக்கீடு தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in ஆகிய இணைய தளங்களில் பார்த்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.