ராமநாதபுரம்: குடும்பம் குடுபமாய் சுற்றுலா சென்ற இடத்தில் உயிர் காக்கும் கருவி வழங்கப்படாமல், அதிகாரிகளின் அலட்சிய செயலால் சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. ராமநாதபுர மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு, சதுப்புநில காடுகளை சுற்றி பார்ப்பதற்காக உசுலனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 பேர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வரும்போது படகோட்டி வேகமாக படகை திரும்பியதால் திடீரெனெ கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 15 பேரும் தத்தளித்த நிலையில், படகை இயக்கியவர் அவர்களை மீட்க உதவாமல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த மீனவர்களே, அனைவரையும் மீட்டு கரைசேர்த்தனர். எனினும் விஸ்வ அஜித் என்ற 5 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். படகில் 15 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருசிலருக்கு மட்டுமே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதாக படகில் சென்றவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.