கரூர்: கரூர் கோவிந்தம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ஊர்ப்புற நூலக கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி பகுதியில் கோவிந்தம்பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பகுதி மக்கள் நலன் கருதி பொதுநூலகத்துறையின் சார்பில் ஊர்ப்புற நூலகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் ஊர்ப்புற நூலகம் ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கி வந்ததால் புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில், இந்த நூலகத்திற்கு எதிராகவே புதிதாக நூலக கட்டிடம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.