சென்னை: சுங்கச்சாவடியை கடக்கும் அனைத்து அரசு பேருந்துகளும் பாஸ்டேக் முறைக்கு மாறுவதை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மாதாந்திர பாஸ் திட்டம் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை கடக்கக்கூடிய கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ரொக்கப்பண பரிவர்த்தனைக்கு பதிலாக பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவது நாடு முழுவதும் கட்டாயமாக்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் இம்முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழகத்தை பெருத்தவரையில் மாநிலம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை கடக்கக்கூடிய அரசு பேருந்துகள் மாதாந்திர பாஸ் திட்டத்தில் தான் சுங்கச்சாவடிகளை கடந்து வருகின்றன. இந்த அரசு பேருந்துகளும் பாஸ்டேக் முறைக்கு மாற வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கட்டாயமாக்கியிருக்கிறது. இதனை வலியுறுத்தி தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. அதில் அரசு பேருந்துகளுக்கு இனி மாதாந்திர பாஸ் திட்டம் கிடையாது. பாஸ்டேக் முறைக்கு மாற வேண்டும்.