சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் துவங்கிருக்கிறது. தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோரும், சட்ட பேரவையை சார்ந்த உறுப்பினர்களும் இங்கு வந்திருக்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுதான் துவங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகரீதியாக அனைத்து பகுதிகளிலும் பொது கூட்டம் எவ்வாறு நடத்துவது, மேலும் நலத்திட்டங்கள் எவ்வாறு வழங்குவது மற்றும் எவ்விதமான கொண்டாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.