×

வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

தண்டையார்பேட்டை: சென்னை ஏழுகிணறு பரந்தாமன் தெருவை சேர்ந்தவர் பிரதீப் (26). இவர், நேற்று முன்தினம் மாலை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள தனது நண்பரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென்று பிரதீப்பை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் திரண்டதால்  மர்மநபர்கள் தப்பினர். படுகாயமடைந்த பிரதீப்பை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : plaintiff , Plaintiff, volley, sickle cut
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது