புதுடெல்லி: தனியார் ரயில்களில் வசூல் குறைந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசுக்கு 180 மடங்கு அபராதம் செலுத்த வேண்டி வரும் என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, முக்கிய வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்க உள்ளது. தமிழகத்தில் சென்னையில் இருந்து மதுரை, கோவை உட்பட முக்கிய வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயங்கும். இதற்கான விதிகள், ஒப்பந்த மாதிரிகள் நிதி ஆயோக்கின் வரைவு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தனியார் ரயில் இயக்க ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் வருவாய் ஈட்ட வேண்டும்.