ஈரோடு: ‘‘ஏற்கனவே பாடச்சுமை உள்ள நிலையில் ஜல்லிகட்டை பாடதிட்டத்தில் சேர்க்க முடியாது’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் நேற்று காளிங்கராயன் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கோபி பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மையத்தை மாற்று பள்ளிகளில் அமைக்க உள்ளதாக வந்த தகவல்கள் தவறானது. அவ்வாறு பள்ளி கல்வித்துறை சார்பில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.