புதுக்கோட்டை அருகே பிட் காயின் மூலம் 1000 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி: தம்பதி மீது போலீசில் புகார்

பொன்னமராவதி: பொன்னமராவதி  அருகே பிட்காயின் மோசடியில் ஆயிரம் பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி  செய்த கணவன், மனைவி மீது  நடவடிக்கை எடுக்க கோரி காரையூர் போலீசில் மக்கள் புகார் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதி அருகே  ஒலியமங்கலத்தை சேர்ந்த முருகேசன். இவரது மனைவி  கோசலை, இவர்களது உறவினர் புலவனார்குடி கார்த்தி ஆகியோரிடம் பிட்காயினில், பொன்னமராவதியை சேர்ந்த  ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். இதில் ஆயிரம் ரூபாய் கட்டினால் 3  மடங்கு பணம் உங்களுக்கு கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியதால்  ஆயிரத்துக்கு மேற்பட்டோர்  பணம் கட்டியுள்ளனர்.

இந்நிலையில்  சொன்னபடி பணம் வரவில்லை.  இந்த பகுதியை சேர்ந்த பாலகுறிச்சி  ஆறுமுகக்குமார், முத்தையா, சுந்தம்பட்டி பெரியசாமி, சடையம்பட்டி கணபதி,  ஆ.வைரம்பட்டி பொன்னுச்சாமி, மடத்துப்பட்டி செந்தில்குமார் மற்றும்  பொதுமக்கள் திரண்டு வந்து காரையூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.  அப்போது போலீசார் கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தி ஏமாந்ததாக கூறுகிறீர்கள்.  நீங்கள் மாவட்ட கலெக்டர், எஸ்பியிடம் மனு கொடுங்கள் என்று சொல்லி  அனுப்பி விட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இன்று  அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories: