பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே பிட்காயின் மோசடியில் ஆயிரம் பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி காரையூர் போலீசில் மக்கள் புகார் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஒலியமங்கலத்தை சேர்ந்த முருகேசன். இவரது மனைவி கோசலை, இவர்களது உறவினர் புலவனார்குடி கார்த்தி ஆகியோரிடம் பிட்காயினில், பொன்னமராவதியை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். இதில் ஆயிரம் ரூபாய் கட்டினால் 3 மடங்கு பணம் உங்களுக்கு கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியதால் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர்.