×

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும்: ரவிக்குமார் வலியுறுத்தல்

குமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். விவேகானந்தர் பாறைக்கு மின்விளக்கு அலங்காரம் இருக்கும் போது வள்ளுவர் சிலையை பராமரிக்காதது பாரபட்சமானது. திருவள்ளுவர் தினத்தன்று கூட மின்விளக்குகள் இன்றி வள்ளுவர் சிலை உள்ள இடம் இருள் சூழ்ந்து இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Ravikumar ,Thiruvalluvar ,Kanyakumari , Thiruvalluvar Statue, Lighting, Ravikumar
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...