டெல்லி: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்று தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு தாராள சலுகை வழங்கியுள்ளது. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதில் இருந்தும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திடீர் நடவடிக்கையால் விவசாயிகள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 341 கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே அளித்துள்ளது. வேதாந்தா நிறுவனம் ஓ.என்.ஜி.சி இனைந்து ரூ.20,000 கோடியில் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.